வெடிப்புச் சம்பவ விசாரணைகளை நடத்த இராணுவ நீதிமன்றம் – தேசிய பாதுகாப்பு பேரவை

blast_armycamp_Fotor

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இராணுவ அடிப்படை நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்துவது என தேசிய பாதுகாப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், சம்பவம் குறித்து விசாரிக்க அடிப்படை இராணுவ நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்துமாறு இராணுவ தளபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாதுகாப்பு பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.