ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா

இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் போய்ஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, ஆர்.கே. நகரின் பல்வேறு பகுதிகளில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.  குறைந்தது 20 இடங்களுக்கு சென்று தன்னை வெற்றிப் பெற செய்த வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
 
முன்னதாக, சூரிய நாராயண பகுதியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய ஜெயலலிதா “ நான் வாக்கு கேட்டு வந்த போது உங்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தேன். முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறேன். 

விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க” என்று  தெரிவித்தார்

சாலைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.