அனுர சேனாநாயக்கவை சிறையில் சந்தித்த மகிந்த !

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை சந்தித்துள்ளார். 

mahintha rajapவெலிகடை விளக்கமறியல் சிறைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனுர சேனாநாயக்கவை சந்தித்து, அவரது நலன் குறித்து விசாரித்துள்ளதாக தெரியவருகிறது. 

வசீம் தாஜூடீனின் கொலையை விபத்தாக சித்தரிப்பதற்காக, சாட்சியங்களையும் தடயங்களையும் அழித்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாஜூடீன் கொலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.