பணம் மீள வழங்க நடவடிக்கை !

images (2)கோல்டன் கீ நிறு­வ­னத்தின் அனைத்து வைப்­பா­ளர்­க­ளி­னதும் பணம் அவர்­க­ளுக்கு மத்திய வங்கியின் ஊடாக மீள வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஒரு வரு­டத்தில் அனைத்து வைப்­பா­ளர்­க­ளுக்கும் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள் ­ளது.

 

எனவே, இது தொடர்­பாக வைப்­பா­ளர்கள் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்­கு­களை வாபஸ் பெறு­வ­தற்கும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். கொழும்­பி­லுள்ள நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்­கி­ழமை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் ஆகி­யோ­ருடன் கோல்டன் கீ நிறு­வ­னத்தில் பணம் வைப்பு செய்­த­வர்கள் சந்­தித்து பேச்சு வார்த்­தை­களை நடத்­தினர். இதன்போதே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்இ கோல்டன் கீ நிறு­வ­னத்தில் நமது பணத்தை வைப்­பி­லிட்­ட­வர்கள் அதனை மீளப் பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அந்­நி­று­வ­னமும் மூடப்­பட்­டது.

இவ்­வாறு பல வரு­டங்­க­ளாக பணத்தை வைப்­பி­லிட்டோர் சிர­மங்­களை அனு­ப­வித்­தனர். இந்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய மத்­திய வங்கி ஆளு­ந­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இன்று வைப்­பா­ளர்­களை சந்­தித்தோம்.

இவர்கள் அனை­வ­ருக்கும் அவர்­க­ளது பணத்தை மத்­திய வங்­கியின் ஊடக வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் மேற்­கொள்வார். இதற்­க­மைய 2 மாதத்­திற்குள் 2 மில்­லியன் வைப்­புக்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­க­ளையும் அதன் பின்னர் 2 மாதங்­க­ளுக்குள் மேலும் 2 மில்­லி­ய­னுக்­கான கொடுப்­ப­ன­வு­களை வழங்­கவும் அனைத்து வைப்­பீட்­டா­ளர்­க­ளுக்கும் ஒரு வரு­டத்­திற்குள் அவர்­க­ளது பணத்தை வழங்கி முடிக்­கவும் தீர்­மானிக்கப்­பட்­டது.

அதேவேளை வைப்­பா­ளர்கள் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்­குகள் வாபஸ் பெறப்­பட வேண்­டு­மென்ற நிபந்­த­னை­யையும் நாம் முன் வைத்தோம். இதனை வைப்­பா­ளர்கள் ஏற்றுக் கொண்­டனர். அத்­தோடு அது தொடர்பில் எழுத்து மூலம் உறு­தி­மொ­ழியை கோரினர்.

எதிர்­வரும் 18 ஆம் திகதி இது தொடர்­பான வழக்கு நீதி­மன்­றத்தில் விசா­ரணைக்கு எடுத்துக் கொள்­ளப்படும் போது எழுத்து மூலமான உறுதி மொழியை நீதிமன்றத்துக்கு நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தோம். அதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக மத்திய வங்கி ஆளு நர் மேற்கொள்வார் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.