பனாமா ஆவணங்கள் குறித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை – அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர்

பனாமா ஆவணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
பனாமாவில் தாம் எவ்வித பணத்தையும் முதலீடு செய்யவோ அல்லது வைப்புச் செய்யவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் வருமானம் வெளிநாட்டு நாணயங்களின் ஊடாக திரட்டப்பட்டது என நிசாங்கவின் சட்டத்தரணி, நிசான் பிரேமதிரன தெரிவித்துள்ளார்.
பனாமாவில் பணம் வைப்புச் செய்யப்பட்டமை நிரூபிக்கப்பட்டால் அந்தப் பணம் அனைத்தையும் கண்டு பிடிக்கும் நபருக்கே வழங்க உள்ளதாக தமது கட்சிக்காரர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 
பனாமா ஆவணத்தில் ஏனைய பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமது பெயரை ஊடகங்கள் அதிகமாக பிரச்சாரம் செய்து வருவதாக தமது கட்சிக்காரர் வருத்தம் வெளியிட்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.