சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க முடியாது !

சிறு­பான்மை அர­சாங்­கத்­துக்கு தொடர்ந் தும் ஆட்­சியை கொண்டு செல்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. உலகில் எந்த நாட்­டிலும் சிறு­பான்மை அர­சாங்­கங்கள் ஆட்சி நடத்­தி­ய­தில்­லை­யென முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார்.

images (1)

 

மேலும் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் அமைப்­ப­தற்கோ ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கு­வ­தற்கோ நாட்டு மக்கள் வாக்­க­ளிக்­க­வில்­லை­யெ­னவும் அவர் தெரி­வித்தார்.

நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று முன்தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் ஐ.தே.க.வுக்கு 48 ஆச­ னங்கள் இருக்­கின்­றன. எங்­க­ளுக்கு 125க்கு மேற்­பட்ட ஆச­னங்கள் இருக்­கின்­றன. நாங் கள் தான் இந்த அர­சாங்­கத்­துக்கு பலத்தை கொடுத்து வரு­கின்றோம்.

நாங்கள் இந்த அர­சாங்­கத்­துக்கு 100 நாட்­க ­ளுக்கே ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தோம். தற்­போது 100 நாட்கள் முடி­ வ­டைந்­துள்­ளன. எனவே சிறு­பான்மை அர­சாங்­கத்­துக்கு தொடர்ந்தும் எங்­களால் ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது.

தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்கும் முக­மாக பாரா­ளு­மன்­றத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என கூறு­கின் ­றனர். ஆனால் தற்­போ­தைய முறை­மை­யி லேயே எதிர்­வரும் பொதுத்­தேர்தல் நடை­பெறும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். எனவே தொடர்ந்தும் இந்த பாரா­ளு­மன்­றத்தை கொண்டு செல்ல அனு­ம­திக்க முடி­யாது. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஆத­ர­வா­ளர்­களை வேட்­டை­யா­டு­வ­தற்கும் அவர்­க­ளுக்கு தொந்­த­ர­வ­ளிப்­ப­தற்கும் இன்னும் அவர்­க­ளுக்கு அளிக்­கக்­கூ­டிய அனைத்து வித­மான கஷ்­டங்­க­ளுக்கும் நாங்­கள்தான் இந்த அர­சாங்­கத்­துக்கு பலம் கொடுத்து வரு­கின்றோம். தற்­போது இந்த நிலை­மையை முடித்து கொள்­வ­தற்கு காலம் ஏற்­பட்­டுள்­ளது.

சிறு­பான்மை அர­சாங்­கத்­துக்கு கொள்­கை­யொன்றை உரு­வாக்கி வழி நடத்த முடி­யாது. பிரச்­சி­னைகள் ஏற்­படும். எனவே இதற்­கான சிறந்த வழி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பெரும்­பான்­மையை கொண்ட அர­ சாங்கம் ஒன்றை அமைக்க மக்­க­ளுக்கு சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தாகும். இந்த அர­சாங்­கத்தால் பாரா­ளு­மன்­றத்தில் சட்டம் ஒன்றை இயற்­று­வ­தற்கோ அல்­லது நிதி தொடர்­பான விட­யங்­களை மேற்­கொள்­வ­தற்கோ முடி­யாது. அதற்­கான பலம் பாரா­ளு­மன்­றத்தில் இல்லை.

எனவே பாரா­ளு­மன்­றத்தில் சிறுபான்மை யாக இருக்கும் ஐ.தே.க. வுக்கு அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனும திக்க முடியாது. அதேபோன்று 48 ஆசனங் கள் மாத்திரம் இருக்கும் கட்சி ஒருவருக்கு பிரதமராக இருப்பதற்கு அனுமதிக்க முடி யாது என்றார்.