சம்பந்தனிடம் கையேந்த நாங்கள் ஹகீம் கிடையாது :SM சபீஸ்

safees
வரலாறுகளை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமூகமும் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர முடியாது
 
இன்றுள்ள தமிழ் முஸ்லிம் தலைவர்களாக  இருப்பவர்களில்  சம்பந்தன் அவர்கள் வரலாறு தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றப் பார்கிறார்.மறுபுறம்  .ஹகீம் மு கா உருவாக்கப்பட்டதற்கான வரலாறு தெரியாதவராக இருக்கின்றார்.
 
இதற்கு அண்மையில் சம்பந்தன் அவர்கள் முஸ்லிம்கள் உரிமைக்காக எந்தப்போராட்டமும் நடத்தவில்லை என்று கூறியதும், அதேபோன்று முஸ்லிம்களின் பிரச்சினைகளை சம்பந்தன் அவர்கள் தீர்த்து தரவேண்டும் என்று ஹகீம் கேட்டுக்கொண்டதனையும் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். .
 
தமிழீழ  தாயகத்துக்கான போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்தளவு பங்கு கொண்டனர், எவ்வளவு உயிர் தியாகம் செய்தனர் என்பது சம்பந்தன் அவர்களுக்கு நன்றாக தெரியும்.. ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளின் கரம் மேலோங்கி இருந்த நிலையில் யுத்தத்தில்  வெற்றிபெறக்கூடும் என எண்ணிய பிரபாகரன், வெற்றிகொள்ளப்படும்  நில புல ராஜ்ஜியங்களை தமிழர்கள் ஆளவேண்டும் என்ற எண்ணத்துக்கும் மேலாக தமிழர்கள் மாத்திரமே வாழவும்வேண்டும் ஆழவும் வேண்டும்  என நினைத்து  முஸ்லிம்களை அழித்தொழிக்க  முற்பட்ட வரலாறு சம்பந்தன் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
 
ஒரு இனத்தின் உரிமைக்காவும் விடுதலைக்காகவும் போராடியவர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று அழைத்தாலும் குறைந்த வருடங்கள் மக்களுக்காக  போராடிய பயங்கரவாதக் குழுக்களால் அம்மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் சுமார் 35 வருடங்கள் போராடிய பிரபாகரனால் ஒரு இஞ்சி நிலத்தைக்கூட ஆட்சி செய்யமுடியாமல் போனதன் முஸ்லிம் விரோத வரலாற்றை சம்பந்தன்  அவர்கள் மறந்து விட வாய்ப்பில்லை.
 
வடக்கு முஸ்லிம்களை உடுதுணியோடு வெளியேற்றியபோது அம்மகள் பட்ட துயரை கண்டும் காணாதது போல் கண்பொத்தி வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் மக்களை இறைவன் தண்டிக்காமல் இல்லை.எங்கள் பகுதிகளில் மிருகங்களைக்கூட கம்புகளை நாட்டி இரண்டு வரியில் கம்பி இட்டு அடைத்து வைப்பர், ஆனால் வடக்கு தமிழ் மக்களை மெனிக் பாமில் 9 பட்டுக் கம்பியால் சுத்தப்பட்ட கூண்டுக்குள் மிருகங்களை விடவும் மோசமாக அடைத்து வைத்திருன்தனர் , இதனை நான் சுட்டிக் காட்டுவது அம்மகளை நோவினை செய்வதற்காக அல்ல கண்முன்னே அநீதி நடந்தும் கண்கெட்டவர்கள்போல் இருந்தமையின் விளைவுகளால் ஏற்பட்ட வரலாற்றை சம்பந்தன் அவர்களுக்கு ஜாபாகப் படுத்த விரும்புகிறேன்.
 
கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே எமது முஸ்லிம்  மக்கள் விரும்புகின்றனர், அதனால்தால் விருப்பத்துக்கு மாறாக இணைக்கப்பட்ட வடகிழக்கு சட்டரீதியாக பிரிக்கப்பட்டதன் பின்பு மீண்டும் இணைப்பது என்பது உங்கள் கனவாக இருந்துவிட்டுப்போகட்டும்.மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த எமது வீரமிக்க இளைஞ்சர்களும் மக்களும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை சம்பந்தன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள நாங்கள் விரும்புகின்றோம்.
 
வடகிழக்கினை பொறுத்தமட்டில் முஸ்லிம்களுக்கு என்று  ஒருதனியான கட்சி அவசியமானது என்பதன் அடிப்படியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அதேநேரம் இம்மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழுகின்ற  பெரும்பான்மை மக்களோடு கலந்து வாழகின்றமையினால் பிளவுகள் ஏற்படாவண்ணம் பெரும்பான்மை கட்சிகளோடு சங்கமிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு  இருக்கின்றது அதுதான் யதார்த்தமும்கூட
 
மக்களின் தேவைகளை பிரித்தறியும் ஆற்றலற்ற ஹகீம் வடகிழக்கு முஸ்லிம்களை அடிமைகளாகி அழிக்கப்பார்கின்றார்
 
வடகிழக்கு மக்களின் சீதோஷன,  பூகோள அமைப்பினை பற்றி தெரியாத இவர் எமது மகளுக்கு  இஸ்லாமிய  தமிழர்கள் என்ற அடையாளத்தை பெற்றுத்தர எத்தனிக்கின்றார். அதனால்தான் பாலமுனையில் இடம்பெற்ற  மு கா தேசிய மாநாட்டில் சம்பந்தன் அவர்களிடம் எங்கள் பிரச்சினையை தீர்த்து தாருங்கள் என   பிச்சை கேட்டதை நாம் கண்கூடாக கண்டோம். அதேபோன்று நாட்டில் இனப்பிரச்சினை தொடர்பான முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது வெளிநாட்டுக்கு பயணம் சென்று விடுகின்றார். 
 
 
அரசாங்கத்திடம் பிச்சை பாத்திரம் ஏந்துபவர்களிடம் நாம் பிச்சை கேட்பதா? ஒருநாளும் நடக்காது ஹகீம் வேண்டுமானால் டயஸ் போராவிடம் இருந்து பெற்ற பணத்திற்கு வேண்டுமானால் சம்பந்தன் காலடியில் விழுந்து கிடக்கட்டும் எமது மக்களுக்கான தீர்வினை தரவேண்டியது அரசாங்கமே தீர்வு கிடைப்பதற்கு நாங்கள் இன்னமும் போராடத்தான் வேண்டும் என்றால்  அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்