குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவு , வாக்கெடுப்பை மீண்டும் நடத்த தீர்மானம்

55 மில்லியன் ரூபாவுக்கான அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த பிரேரணைக்கு சாதகமாகவும் எதிராகவும் தலா 31 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 

முன்னதாக இந்தப் பிரேரணை 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

எனினும் சிலரால் கணக்கெடுப்பு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, மீள வாக்குகள் எண்ணப்பட்ட வேளை சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

எனவே இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.