மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற காங்கிரஸின் மேதினம்

க.கிஷாந்தன்

DJI_000 (7)_Fotor

 

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது.

இக்கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016 அன்று இடம்பெற்றது.

நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின்  மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.

இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

DJI_000 (10)_Fotor

 

அத்தோடு முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, தொழிலாளர் தேசிய சங்க முன்னால் தலைவர் டி.ஐயாதுரை, முன்னால் நுவரெலியா பிரதேச சபை தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினருமான என்.சதாசிவன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் இளங்கோவன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர்

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

aarumaugan

IMG_3112_Fotor