JVP யின் மே தின நிகழ்வுகள் தெகிவளையில் ஆரம்பம்

62500_Fotor

 

மக்கள் விடுதலை முன்னணி தமது மே தின ஊர்வலத்தை தற்போது தெஹிவளை எஸ்.டீ.எஸ்.ஜயசிங்க விளையாட்டு மைதானத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது.

இந்த ஊர்வலம் முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

முன்னணியை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகள் இந்த பேரணியில் இணைந்துள்ளன.

இந்த பேரணி எஸ்.டீ.எஸ்.ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் இருந்து தெஹிவளை வைத்தியசாலை வீதி, வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை வீதி ஊடாக கொழும்பு பீ.ஆர்.சி மைதானத்திற்கு செல்லவுள்ளது.

6250_Fotor