கைதுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த வட மாகாணசபைக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட சுப்பிரமணியம் சிவகரன் இன்று கைதுசெய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sumanthiran_6

அதில் இந்த கைது தொடர்பில் தமது கட்சி ஆழ்ந்த கரிசனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் கைதுசெய்யப்பட்ட அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறன கைதுக்கள் தவிர கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கைதுகள் உத்தியோகபூர்வமாக அல்லாது கடத்தப்பட்டு பின்னர் கைதுகள் என்று அறிவிக்கப்பட்டமையானது பாரதூரமான விடயமாகவே கருதப்படுகிறது.

இந்த முறைகேடான கைதுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் சுமந்திரன் தமது அறிக்கையில் கோரியுள்ளார்.