கபீர் ஹாசிம், மற்றும் மகிந்தவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

kabir hashim

 

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், தேர்தல்கள்ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட்ட 7 பிரதிவாதிகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

அமைச்சர் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில்இடம் வழங்கியமையை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தென்மாகாண சபையின் முன்னாள்உறுப்பினர் அஜித் பிரசன்ன மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

சரத் பொன்சேகாவுக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கப்பட்டமை முறையற்றது. 

அத்துடன் அது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்து குறித்த மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை மனு மீதான விசாரணை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.