வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை…?

Let-My-People-Vote

எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் யோசனை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இது குறித்து ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

23 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த அனுரகுமார திஸாநாயக்க, நிஹால் கலப்பத்தி, விஜித ஹேரத், சுனில் அந்துன்நெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இலங்கை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டார் தொழில் புரிந்து வருகின்றனர். 

இவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.