தாஜு­தீனின் கொலை விவ­காரம் குறித்து கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

பிர­பல ரகர் வீரர் வசீம் தாஜு­தீனின் கொலை விவ­காரம் குறித்து தற்­போது பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில், நான் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­ய­போது ஆவே­ச­ம­டைந்து என்னை தாக்க முற்­பட்ட கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் புல­னாய்வு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்­துள்ளார். 

Mujeebur-Rahman

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், 

மஹிந்த அர­சாங்கம் வசீம் தாஜு­தீனின் கொலையை மூடி மறைத்­தது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இந்த படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை புதிய அர­சாங்கம் முன்­னெ­டுத்­தது. எனினும் கடந்த வாரம் வரை எவரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. 

இது குறித்து நான் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­து­ரைத்­த­போது என்னை தாக்­க­முற்­பட்­டனர். எனக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தனர். 

எனக்­கான அச்­சு­றுத்­த­லுக்கும் முன்னை அர­சாங்­கத்தின் மூடி மறைப்­பிற்கும் காரணம் ஒன்­றா­கத்தான் இருக்­க­வேண்டும். 
வசீம் தாஜு­தீனின் கொலை­யுடன் மஹிந்த அர­சாங்கம் செயற்­பட்­டி­ருக்­கி­றது. அதனை மூடி மறைப்­ப­தற்­கா­கவே இவ்­வி­சா­ர­ணைகள் முடக்­கப்­பட்­டி­ருந்­தன. 

பொலிஸ் திணைக்­களம் இவ்­வி­வ­காரம் குறித்து கரி­சனை காட்­ட­வில்லை என்­கிற குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­போது மஹிந்த ஆத­ரவு அணி­யி­ன­ரான பொது எதி­ர­ணி­யினர் என்னை தாக்க முற்­பட்­டனர்.

அவர்கள் இவ்­வி­டயம் குறித்து அதீத ஆவேசம் அடைந்­ததன் காரணம் அவர்­களின் குற்றம் அம்­ப­லமாகும் என்­கிற பயத்தின் வெ ளிப்­பாடே. எனவே என்னை தாக்க முற்­பட்ட ஜோன்ஸ்டன் எம்.பி. போன்­ற­வர்­க­ளிடம் தற்­போது விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். 

அத்­துடன் தற்­போது கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் பொலிஸ் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரியின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் உயர்­மட்ட பொலிஸ் அதி­கா­ரி­களும் கைதா­கலாம். அவர்­க­ளுக்கு கட்டளையிட்ட அதிகார தரப்பினரும் கைதாகலாம்.

எனவே பொலிஸ் பிரிவினர் சட்டம் ஒழுங்குகளை நீதியான முறையில் அமுல்படுத்தி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்.