உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் !

Unknownஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற  தேர்தல் முறைமை தொடர்பிலான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர் அது 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. 

அந்த சட்டமூலம் , 20ஆம் திகதி வாக்ககெடுப்புக்கு விடப்படும். அது அன்றையதினமே நிறைவேற்றப்பட்டால் அன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.