முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாய்லாந்துக்கு செல்லவுள்ளார் !

 

Mahinda-Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச சில நாட்களில் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தாய்லாந்து செல்லவுள்ளார்.