சமஷ்டி என்ற எண்ணக்கரு தமிழ் மக்களின் கோரிக்கையல்ல – ஜே.வி.பி

Tilvin Silva

 

சமஷ்டி என்ற எண்­ணக்­க­ருவும் கோரிக்­கையும் தமிழ் மக்­களின் கோரிக்­கை­யென நாம் நம்­ப­வில்லை. இது தமிழ் அர­சியல் கட்­சி­களின் கோரிக்­கை­யென்றே எண்­ணுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

கட்­சி­யென்­ற ­ரீ­தியில் நாம் எதிர்­பார்ப்­பது தமிழ், முஸ்லிம் மற்றும் மலை­யக மக்கள் உட்­பட, அனைத்து மக்­க­ளுக்கும் சம உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்றும் சமஷ்டி என்­பதை தேசிய ஒற்­று­மைக்­கான தீர்­வாக நாம் ஒரு போதும் எண்­ண­வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமஷ்டி மக்­களை தூரப்­ப­டுத்­துமே தவிர இனங்­களை அண்­மைப்­ப­டுத்­தாது என்றும் தமிழ், முஸ்லிம், மலை­யகம் உட்­பட அனைத்து சமூ­கங்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு தீர்­வென்­பது பிரிந்து செல்­வதால் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய ஒற்­று­மையைக் கொண்­டு­வ­ரு­வதன் மூலமே அதை அடை­ய­மு­டியும் என்று கூறிய அவர் தேசிய ஒற்­று­மையை அடைய வேண்­டு­மானால் சம உரி­மைகள் அனைத்து சமூ­கத்­துக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்றும் அர­சியல் சாச­னத்தின் வழி சம உரி­மைகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்­றைய சூழ்­நி­லையில் தமிழ் மக்­க­ளா­யினும் சரி சிங்­கள மக்­க­ளா­யினும் சரி அல்­லது வடக்கு – தெற்கு மக்­க­ளா­யினும் சரி ஒன்றிணைந்து பொதுப் பிரச்­சி­னை­க­ளுக்­காக போராடத் தயா­ரா­க­வுள்­ளனர் என்றும் அவர் கூறினார்.

தமி­ழக மீன­வர்கள் வடக்கு கடல் பரப்பில் உள்ள மீன் வளங்­களை கொள்­ளை­ய­டித்துச் செல்வதாகவும் இது ஒரு­பா­ரிய பிரச்­சினை எனத் தெரிவித்த அவர் இது குறித்து அரசு எவ்­வித அக்­க­றையும் காட்­ட­வில்லை. த.தே.கூ. எவ் வித குரலும் எழுப்­பு­வ­தா­க­யில்லை என்றும் குறிப்பிட்டார்.

எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் போரா­டியே வெல்ல முடியும் என்று கூறிய அவர் முத­லா­ளித்­துவ அர­சி­யல்­வா­தி­களை மகிழ்ச்சிப் படுத்தும் ஏகா­தி­பத்­தி­யத்தை மகிழ்ச்­சிப்­ப­டுத்தும் பிரி­வி­னை­வாத சமஷ்டி முறை தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு சாத­க­மா­ன­வொன்­றாக தாம் கரு­த­வில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.