இணைய நிதி மோசடிகளை தடுக்க இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் : ரவி

ravi-karunanayake

 

இணைய நிதிமேசடியை தடுக்க ஆசிய நாடுகள் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.

24ஆவது நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் வங்கி ஒன்றில் 100 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதை சுட்டிகாட்டினார்.

குறித்த நிதி மோசடி தொடர்பில் இதுவரையில் எவரும் கண்டறியப்படாதது கவலைக்குறியது என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இது போன்ற இணைய நிதி மோசடிகளை தடுக்க இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை வழங்குமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.