தென் ஆசியாவின் பொருளாதார மையமாக துறைமுக நகர் உருவாக்கப்படும் – சஜித் பிரேமதாச

ColomboPortCity-620x3604_Fotor

 

தென் ஆசியாவின் பொருளாதார மையமாக கொழும்பு துறைமுகர் நகர்த் திட்டம் உருவாக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் பற்றி பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் பூர்த்தியானதன் பின்னர் வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு இந்த திட்டத்தின் ஒரு பகுதியின் உரிமையை வழங்க இணங்கியிருந்ததாகவும் இந்த அரசாங்கம் அதனை நிராகரித்து  விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தினை காத்திரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.