காலி மே தின ஊர்வலத்தில் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்ளமாட்டார் – தினேஷ் குணவர்த்தன

mahinda raja

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகின. 

இது குறித்து, வினவியபோதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் காலி மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.