ஆகஸ்ட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணையக தகவல்கள் வெளியிட்டுள்ளன.

எல்லை நிர்ணய பணி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பாரிய சர்ச்சைகள் நிலவி வந்ததோடு, பல அரசியல் கட்சிகளும் தேர்தலினை அறிவிக்குமாறு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.