பிரதமர் ரணில் – சீன ஜனாதிபதி சந்திப்பு

 


சீனக் குடியரசின் அழைப்பையேற்று சீனா பெய்ஜிங் நகரத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், சீன ஜனாதிபதி ஜி. ஜீன் பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவையாகும்.
இந்த விஜயத்தின் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.