சம்­பந்­தனும் தேசிய பாது­காப்பில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கிறார் – லக்ஷ்மன் யாப்பா அபே­வர்­தன

laxman yappa

 

வடக்கில் பாது­காப்புப் பிரி­வி­னரால்  தற்­கொலை அங்­கி­யொன்று கண்டு பிடிக்­கப்­பட்­டமை நாட்டின் தேசிய  பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து தற்­கொலை அங்­கிகள்  பாது­காப்பு படை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

எதிர்க்­கட்சி  தலைவர் சம்­பந்­தனும் தேசிய பாது­காப்பில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கிறார்.  தற்­கொலை அங்­கி­யுடன்  சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கு  தண்­டனை வழங்கக் கோரி­யுள்ளார் என நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார். 

கொழும்­பி­லுள்ள  ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று மதியம்  நடை­பெற்ற  ஊட­க­வி­லாளர்  மாநாட்டில்  கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான  சம்­பந்தன் வடக்கில் தற்­கொலை  அங்கி கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் விசா­ரணை நடாத்­தப்­பட வேண்­டு­மெ­னவும்,  குற்­ற­வா­ளிகள் கட்­டா­ய­மாக தண்­டிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார்.  ஆனால் ஊட­கங்கள் அவ­ரது செய்­திக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வில்லை. நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு ஊட­கங்கள் பங்­க­ளிப்புச்  செய்ய  வேண்டும். 

அண்­மையில் பாது­காப்பு பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட தற்­கொலை  அங்கி சம்­ப­வத்­தை­ய­டுத்து அடிப்­ப­டை­வாத  அர­சி­யல்­வா­திகள் அர­சுக்­கெ­தி­ராக  கருத்­து­களை  வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு  ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறு­கின்­றனர். நாட்டின்  தேசிய பாது­காப்பு தொடர்பில்  அரசு மிகவும்  எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்­கி­றது.  நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வா­தத்­துக்கும் பிரி­வி­னை­வா­தத்­துக்கும் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. 

பயங்­க­ர­வாதம்  தோற்­க­டிக்­கப்­பட்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட காலம் முதல் வடக்கு, கிழக்கு  மாகா­ணங்­களில் தற்­கொலை  அங்­கிகள்,  வெடி­பொ­ருட்கள், ஆயு­தங்கள்  மீட்­கப்­பட்­டுள்­ளன. இவை  தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்குச் சொந்­த­மா­ன­வை­க­ளாகும் என்­றாலும் அண்­மையில் தற்­கொலை அங்கி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை பற்­றியே பேசப்­பட்டு வரு­கி­றது.