ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு 20

SLPL-Logo_Fotor

 

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் (SLPL) இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இலங்கை கிரிக்கட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

நேற்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது விடயம் தொடர்பாக தெரியவந்தது. எனினும் குறித்த போட்டிகளின் அமைப்பு தொடர்பாக கிரிக்கட் நிறுவனத்தினால் இறுதி முடிவு எட்டப்பட்டில்லை.
பெரும்பாலும் குறித்த போட்டிகள் அடுத்த ஆண்டில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் (SLPL) போட்டிகள் முதல்முறையாகவும் இறுதியாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது