ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

stafanie-taylor-meg-lanning_3441204_Fotor

 

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை பெண்கள் இறுதி போட்டி நாளை கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டெய்லர் கூறும்பொழுது “அவர்கள் (ஆஸ்திரேலிய அணி) 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளனர். எங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.  நாங்கள் விளையாட செல்கிறோம். நம்பிக்கையுடன் இருக்கிறோம். கோப்பையை முதன்முறையாக வெல்வதற்கு நாங்கள் நிச்சயம் விரும்புகிறோம்.

இதற்கு முன் 3 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இந்த முறையும் போட்டி அமைந்துவிட்டால் அவர்களுக்கு 4-வது வெற்றி கிடைக்கும். ஆனால், நாங்கள் பயந்துவிடவில்லை. பதற்றமின்றி விளையாடவே முயற்சிக்கின்றோம்” என கூறியுள்ளார்.