ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஹாசிப் யாஸீன்

2_Fotor
விளையாட்டுத்துறை அமைச்சின் கீழுள்ள ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவர் நிறுவனத்தின் புதியகட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (01) வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

1_Fotor

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.கே.டி.திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டனர்.