தேசியப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் : மஹிந்த ராஜபக்ஸ

Mahinda-Rajapaksa3-640x400

 

தேசியப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார ரீதியான அபிவிருத்தியைப் போன்றே தேசியப் பாதுகாப்பும் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் பிரச்சினை உருவாகியுள்ளதாகவே தாம் கருதுவதாகவும் நாட்டின் மெய்யான பாதுகாப்பு நிலைமைகள் பற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள ஐயத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறித்து புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மக்களுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.