இலங்கை இந்தவருடம் சீனாவுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவுள்ளது

Sri-lanka-china_Fotor

 

இலங்கை இந்தவருடம் சீனாவுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணானே ஹெட்டியாராச்சி சீனாவின் சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு இதனை தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சீனா இலங்கைக்கு ஆதரவளித்தது. இரு நாடுகள் மத்தியிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. சீனாவுடன் மேலும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்துவருகின்றோம். ஏற்கனவே சீனாவில் இலங்கை படையினரிற்கு சில பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, நாங்கள் அவற்றை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.