ஜி.எல்.பீரிசின் கருத்து தொடர்பில் விசாரிக்க நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

G.L-Peiris

 

யாழ், சாவகச்சேரி பகுதியில் நேற்று வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி இதனைத் தெரிவித்தார்.

நேற்று மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திற்கு கொண்டுவர தயார் படுத்தப் பட்டிருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.