இராணுவத்தினரிடம் சரணடையாத பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை : கோத்தபாய

gotabhaya-rajapakse_Fotor

 

சாவகச்சேரியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் இராணுவத்தினரிடம் சரணடையாத பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்வாறானவர்கள், நாட்டிற்கு பாரதூரமான அச்சுறுத்தலாக மாறக்கூடும் என கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்