கல்விசார ஊழியர்களால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் பேரணியும்

எம்.வை.அமீர்
12899943_720062911429629_1883224599_n_Fotor 
கடந்த 2016.03.24 ஆம்  திகதி இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு  அமைய,   இன்று சகல பல்கலைக் கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் பேரணியும் நடத்தப்படுகின்றது .
 குறித்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப்   பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். 
12910088_720076241428296_1224601599_n_Fotor
 ஊழியர்களின் சம்பள முரண்பாடு,ஓய்வுதியம் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாக  இன்றைய வேலைநிறுத்தத்தில் தாங்கள் இறங்கியுள்ளதாகவும் ஊழியர்களின் கோரிக்கைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும்  கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் கோரிக்கைகள் தொடர்பில்  கவனம் செலுத்தாது விடின் எதிர்காலத்தில் தொடர்சியான  போராட்டங்களில் ஈடுபட வேண்டியும் வரலாம் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்  சங்கத்தின் தலைவர் வை .முபாரக் தெரிவித்தார்.