நாட்டில் ஆட்சி அமைக்க தெரியாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள் : விமல் விசனம்

wimal vimal

 

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் அரசு விளையாடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்தார்.

கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாவகச்சேரியில் நேற்று மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து யுத்த ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அனைத்துமே தற்போது, புதுப்பிக்கப்பட்டவையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட பொருட்களை பொதி செய்ய கடந்தவார சிங்கள பத்திரியையொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதேவேளை, அந்த பொதியில் வெள்ளவத்தை என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு நாட்டில் ஆட்சி அமைக்க தெரியாதவர்கள் ஆட்சியில் இருப்பது தான் காரணம் என அவர் தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் இதுவரையில், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தகவலை அறிந்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்தா