மரணிக்கும் போதும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே மரணிப்பேன் – நிமால் சிறிபால டி சில்வா

Nimal Sripala_CI

 

மரணிக்கும் தருவாயிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே மரணிப்பேன் என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தாம் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனவில் கூட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.