டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் !

க.கிஷாந்தன்

IMG_0185_Fotor

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடக்கும்புர – ஒக்ஸ்ப்போட் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது. 

18.03.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக 50 ஏக்கர் கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 30 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். 

 

IMG_0214_Fotor

தீயை கட்டுப்படுத்த தலவாக்கலை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.  இந்த தீயினால் தேயிலை செடிகளும் கருகியுள்ளது.
எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 30 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

IMG_0222_Fotor