ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை வழங்க முடியாது : ரவி !

ravi-karunanayake
ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சலுகை விலையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், தீர்வையற்ற வகையில் மோட்டார் சைக்கிள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியாது.

தீர்வையற்ற வகையில் மோட்டார் சைக்கிள்களை வழங்க நிதி அமைச்சரான எனக்கோ , ஜனாதிபதிக்கோ முடியாது.

அவ்வாறு தீர்வையற்ற வகையில் மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டுமாயின் நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேறு எவரும் வாக்குறுதி அளித்திருந்தால், அந்த வாக்குறுதிகளை அவர்களிடம் தான் நிறைவேற்றுமாறு கோர வேண்டுமென ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.