இன்று முதல் மின்தடை இல்லை :அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ranjith

மின்சாரம் இன்றைய தினம் முதல் தடைப்படாது என மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு ஏழரை மணி நேர மின்வெட்டை அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும், தற்பொது நுரைச்சோலை மின் நிலையம் முழு அளவில் இயங்க ஆரம்பித்திருப்பதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.