இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது !

mahinda_group_009 mubarak abdul
இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் தமது பொதுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Unknown

இந்த மாபெரும் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

mahinda_group_005

இதன்போது, கட்சியின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். 

தற்போதைய நல்லாட்சிக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி நேற்று முன்தினம் பாரிய பேரணி ஒன்றை நடத்தியது. குறித்த பேரணிக்கு எதிரான இந்த கூட்டத்திற்கு மக்கள் அணி திரண்டு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. 

join_opp_meet_01