நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் !

namal_mahinda
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல நிறுவனமான கிரிஸ் நிறுவனத்தினால் கொழும்பின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இல்லம், மற்றும் கடைத் தொகுதிக்கு அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காகவே நாமல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

இதன்படி, இன்று காலை அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.