கல்முனை நீதி வலயத்திற்கான உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாகவும் இருவர் நீதி அமைச்சினால் நியமனம் !

பி.எம்.எம்.ஏ.காதர்

 

4-PMMA CADER-15-03-2016_Fotor
மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எப்.எம்.அமீருள் அன்சார் மௌலானா,சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி ஆகியோர் கல்முனை நீதி வலயத்திற்கான சமாதான நீதவான்களாகவும்,உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாகவும் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
1972டின் நீதித்துறை சட்டத்தின் கீழ் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

2-PMMA CADER-15-03-2016_Fotor
இவர்கள் இருவரும் கிழக்கு மாகாண கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(15-03-2016)சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு தங்கள் கடமைகளைப் பொறுப்பெற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மதிவதனி திருட்செல்வமும்; கலந்து கொண்டார்.