உலக கோப்பை ஆட்டத்தை பார்க்க பாகிஸ்தான் அதிகாரிகள் 5 பேருக்கு விசா மறுப்பு !

Pak-vs-Bang_Fotor

 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-10’ சுற்றில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதும் லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 

இந்த போட்டியை நேரில் காண பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் 7 பேர் ‘விசா’ கேட்டு இந்திய தூதரகத்திடம் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 பேருக்கு மட்டுமே கொல்கத்தா செல்வதற்கு ‘விசா’ அனுமதி வழங்கப்பட்டது. எஞ்சிய 5 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

அந்த 5 பேருக்கும் அந்த நாட்டின் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.