அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் தலைமையில் இடம் பெற்றது.

Valthuk Kavi Hand Over to Ashraff Sihabdeen_Fotor

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜாவும் சிறப்பு அதிதிகளாக தொழில் அதிபர்களான புரவலர் அப்துல் கையூம், எம்.எம்..எம்..ஸப்ரி, வைத்தியர் தாஸிம் அஹமது, இஸட் எம் றிஸ்வான் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

DSC_0310_Fotor

 

நூலாய்வினை கவிஞரும், எழுத்தாளருமா லறீனா அப்துல் ஹக்கும், கருத்துரையை பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜாவும் வழங்கினர் இதன்போது நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டதுடன் சிறப்புப் பிரதிகளை புரவலர் அப்துல் கையூம் உள்ளிட்ட ஏனையோரும் பெற்றுக் கொண்டனர்.