மேற்கு வங்காளத்தில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார் !

NarendraModi3_Fotor

 

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் திலப் கோஷ் கூறுகையில், “இம்மாத இறுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறோம். 3-4 கட்டங்களாக நடக்கும் தேர்தலுக்காக சுமார் 10 பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக அவரிடம் தேதி கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை உறுதியான தகவல் வரவில்லை. 

கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய தலைவர்களையும் பிரச்சாரத்திற்கு அழைத்துள்ளோம். மகாராஷ்டிரா, அரியானா, மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்களையும் பிரச்சாரத்திற்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.