மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் விமல் வீரவன்சவே !

கொழும்பிலுள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு வெளியே விமல் வீரவன்ச மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டமே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததாக அமைச்சர் மகிந்த சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

t1larg_Fotor

 

வீரவன்ச ஐநா என்றால் வெறுமனே பிரிட்டனும் அமெரிக்காவும் என நினைத்தார், உண்ணா விரதத்தின் இறுதியில் வீரவன்சவிற்கு இளநீர் வழங்கியதன் மூலம் மகிந்த ராஜபக்ச அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

மேலும் குடும்ப ஆட்சி என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் விமல்வீரவன்சவே, எதிர்கட்சிகள் பின்னர் அதனை பயன்படுத்தின என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்