யோசித , உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் !

யோசித ராஜபக்ஸ உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கைது செய்து தடுத்து வைத்திருத்தல் மற்றும் பிணை வழங்காமை ஆகியனவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

yositha rajapakse

சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையில் நிதி மோசடிகள் இடம்பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யோசித கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யோசிதவின் சார்பில், நேற்றைய தினம் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.