கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவர் !

slfp
கட்சியின் வெற்றிக்காக செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது பலவீனமாக செயற்பட்டு வரும் தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மேலும் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.