தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது :மனோ

தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் தௌிவான புள்ளிவிபரம் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Unknown

அண்மையில் அமைச்சர் கயந்த கருணாதிலக, இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். அத்துடன் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களிடையே பரஸ்பர ஒற்றுமைகள் பல காணப்படுவதாகவும் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.