பிரகித்தை கொலை செய்ய திட்டமிட்டமை பற்றிய சாட்சியங்கள் கிடைத்துள்ளன : புலனாய்வுப் பிரிவு !

prageeth egnaliyagoda
  ஊடகவியலாளர் பிரகித் எக்னெநலிகொடவை கொலை செய்ய திட்டமிட்டமை பற்றிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கிரித்தலே முகாமில் கடமையாற்றிய இராணுவ உத்தியோகத்தர்கள் திட்டமிட்டமை பற்றிய ஒலிப்பதிவு நடா மூலம் தெரியவந்துள்ளது.

முதல் ஒலி நாடாவிலேயே எக்னெலிகொட கொலை முயற்சி குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முதல் தடiவாயக 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி எக்னெலிகொடவை கொலை செய்ய
முயற்சிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் இரண்டாம் சந்தேக நபர் இந்த சூழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.இரண்டாம் சந்தேக நபரது இல்லத்தில் வைத்து எக்னெலிகொட கொலை தொடர்பில்திட்டமிடப்பட்டுள்ளது, இது குறித்த ஒலி நாடா நீதிமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் சந்தேக நபர் கடத்தப்பட்ட மாதத்தில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புநோக்கி உத்தியோகபூர்வ வாகனத்தில் சென்றுள்மைக்கான சாட்சியங்களும் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர்.

இதேவேளை, எக்னெலிகொடவின் சடலமோ உடற்பாகங்களோ கிடைக்காத நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார் என உறுதிபட எவ்வாறு கூற முடியும் என ஹோமாக நீதவான் ரங்க திஸாநாயக்க புலனாய்வுப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடற்பாகங்கள் கிடைக்காத காரணத்தினால் சந்தேக நபர்கள் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதிப்பது நியாயமாகாது என அரச தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.