பொன்சேகாவுக்கு வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்திக்கான அமைச்சுப் பதவி !

sarath-fonseka_Fotor
முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இவ்வார இறுதிக்குள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் அவர் வியாழன் அல்லது சனிக்கிழமை அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமான தகவல்களிலிருந்து தெரிய வந்துள்ளது. 

பொன்சேகாவுக்கு வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்திக்கான அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. 

இதற்கென தனியான அதிகார சபையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் உருவாக்கப்பட்ட மகாவெலி அபிவிருத்தி அதிகார சபை போன்று சரத் பொன்சேகாவின் அமைச்சின் கீழ் உருவாக்கப்படும் அதிகார சபையும் தனி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

பொன்சேகாவின் அமைச்சுப் பதவி தொடர்பான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.