கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டை தமிழ் ,முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்-திலானந்த விதானகே

 

Unknown

நாட்டின் கரை­யோர பிர­தே­சங்­களில் மூன்றில் இரண்டு பகு­தியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்­கி­ர­மி­த்துள்­ளனர். அதன் ஒரு அங்­கமே வில்­பத்து காட­ழிப்பு என பொது பல சேனா அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலாந்த விதா­னகே குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

 

பொது பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

திலாந்த விதா­னகே இங்கு மேலும் கூறு­கையில்,

நாட்டில் தற்­போது கரை­யோர பிர­தே­சங்­களில் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆக்­கி­ர­மிப்பு தொடர்­கி­றது. இதனால் இன்று நாட்டின் கரை­யோர பிர­தே­சங்­களில் மூன் றில் இரண்டு பகு­தியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்­கி­ர­மி­த்துள்­ளனர்.

இந்­நிலை தொடர்ந்தால் நாட்டின் சிங்­க­ளவர் எங்கு செல்­வது. இது தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினால் நாம் இன­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்தப் படு­கிறோம். ஆக்­கி­ர­மிப்பின் ஒரு அங்­க­மாகத்தான் வில்­பத்து பிர­தே­சத்தில் காட­ழிப்பு செய்­யப்­பட்டு குடி­யி­ருப்­புக் கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இதுகுறித்து முன்னாள் ஜனா­தி­பதிக்கும், தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்­கும் அறி­வித்­தி­ருந்த போதும் அவர்கள் இரு­வரும் அச­மந்த போக்­கி­னையே கடைப்­பி­டித்­தனர்.

அதனால் இன்று வில்­பத்து பிர­தே­சத்தில் காட­ழிப்பு செய்­யப்­பட்டு கட்டார் நாட்டின் முன்னாள் பிர­தமர் ஒரு­வரின் பெய­ரி­டப்­பட்ட குடி­யி­ருப்பு தொகுதி ஒன்று உரு­வாக்கப்பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளையே நாம் எதிர்க்­கின்றோம். மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் செய்­யப்­படும் ஒப்­பந்­தங்­களின் வாயி­லாக பெறப்­படும் கடன் உத­வி­களை பெற்று அவற்­றாலும் முஸ்லிம் இனத்­தவர் மட்­டுமே குடி­யேற்றப்படு­கின்­றனர்.

இவ்­வா­றான இன­வாத செயற்­பா­டுகள் நாட்டில் தொடர்ந்தும் இடம் பெறக்­கூ­டாது. அனைத்து இன மக்­க­ளும் ஒரே வித் தில் பார்க்­கப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு.
நாட்டின் தேசிய உரி­மை­களை பாதிக்கும் இது போன்ற செயற்­பா­டுகள் தொடர்பில் பேசிய போதெல்லாம் நாம் இன­வா­தி­க­ளா­கவே அடை­யா­ளப்­படுத்தப்பட்­டுள்ளோம்.

ஆனால் இப்­பொ­ழுது பாரா­ளு­மன்­றத் தில் ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்­கவும் வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்­ச­ரான சஜித் பிரே­ம­தா­ஸவும் குறித்த விடயம் தொடர்பில் பேசு­வது மகிழ்ச்சியளிக்­கின்­றது என்றார்.