இறுதி யுத்தம் – உண்மைகளை விரைவில் சரத் பொன்சேகா பகிரங்கப் படுத்துவார் !

முன்னாள் இராணுவதளபதியும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சரத்பொன்சேகா இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்த உண்மைகளை விரைவில் பகிரங்கப்படுத்துவார் என அமைச்சர் சரத்அமுனுகம தெரிவித்துள்ளார். 

முன்னாள் இராணுவ தளபதி விடுதலைப்புலிகளுடனான இரகசிய உடன்படிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிடுவார், அந்த இரகசிய உடன்படிக்கைகளில் தொடர்புபட்டிருந்த நபர்கள் யார், அந்த பணத்தை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் எவ்வகை ஆயுதங்களை கொள்வனவு செய்தனர் என்ற விபரத்தையும் முன்னாள் இராணுவதளபதிவெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

sarath amunugame

முன்னாள் இராணுவ தளபதியை மகிந்தராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு நடத்தியது என்பதை மறந்துவிட்டு கூட்டு எதிர்க்கட்சியினர் யுத்தவீரர்களிற்காக முதலைகண்ணீர் வடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நானும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தேன், அதற்காக என்னையும் குற்றம்சாட்டவேண்டும் என அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.